இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு வைத்த தந்தை கைது

JKR  திங்கள், 18 ஜனவரி, 2010


தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கியதுடன் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சிறுமிக்கு சூடு வைத்த சந்தேகத்தின்பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அவிசாவளைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்தபோது தந்தை கூறிய ஏதோ ஒரு வேலையை செய்யாமல் சிறுமி அடம்பிடித்தார் எனவும், இதனால் கோபமுற்ற தந்தை, மகளை சரமாரியாக தாக்கியதுமல்லாமல் இரும்புக் கம்பியொன்றை சூடாக்கி அவரது உடலில் சூடு வைத்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் கதறலைக் கேட்டு அங்கு திரண்ட அயலவர்கள் உடனடியாக பொலீசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீக்காயத்துக்கு உள்ளான குழந்தை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr