இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமிதாப்,ஐஷ்வர்யா ராய்,ஷாருக்கான் ஆகியோருக்கு முத்திரைகள் வெளியிட இலங்கை அரசு ஏற்பாடு

JKR  வெள்ளி, 7 மே, 2010

இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தித்திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப் பச்சன்,ஷாருக்கான்,ஐஷ்வர்யா ராய் ஆகியோருக்கு இலங்கை அரசாங்கம் முத்திரைகளை வெளியிடவுள்ளதாக இந்தியத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜூன் மாதம் கொழும்பில் சர்வதேச இந்தியத்திரைப்பட விழாவை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.
இவ்விழாவின்போதே முதல் நாள் உறைகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறு முத்திரைகள் வெளியிடப்படுமானால்,இந்திய நடிக,நடிகையர்களுக்கு முத்திரைகள் வெளியிடப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,இந்தியக்கலைஞர்களின் இலங்கை விஜயத்துக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் மேலும் உக்கிரமமடைந்துள்ளது.
இதன் காரணமாக,அமிதாப் பச்சன் உட்பட ஏனைய கலைஞர்கள் இலங்கைக்கு வருகை தருவது இன்னும் கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr