இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தொழில்நுட்ப அலுவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி

JKR  செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

வுனியா நகர சபை தொழில்நுட்ப அலுவலர் ஒருவர் இன்று தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்யமுயற்சித்துள்ளார். தாடையில் பலத்த துப்பாக்கி சூட்டு காயத்துடன் வவுனியா வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்ல்லிழமை 12 மணியளவில் கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சையின் பொருட்டு அனுராதபுரம் பொதுவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா அம்பலாங்கொடல பகுதியில் வசித்துவரும் வவுனியா நகரசபை அலுவலகத்தின் தொழில் நுட்ப அலுவலருமான 45 வயது கிரிசாந்த என்பவரே இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்.
வவுனியாவில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தற்பாதுகாப்பின் நிமித்தம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த துப்பாக்கியினாலேயே தனக்கு தானே வீட்டில் வைத்து சுட்டுள்ளார் என்பது ஆரம்ப கட்ட
விசாரணையின்போது தெரியவருகின்றது.சமாதான நிலை தோன்றியபோதும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் இன்னமும்
மீளப்பெறப்படவில்லை.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr