ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகள் பெறும் முதல் 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹைடன் 31 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சச்சின் தெண்டுல்கர் 35 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார்.
ஹர்பஜன் சிங் 23 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக