இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

JKR  திங்கள், 5 ஏப்ரல், 2010

Loogix.com. Animated avatars. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் என்று ஆயிஷா.....
சித்திக் பரப்பாக பேட்டி அளித்துள்ளார். இதனால் பிர்ச்சினை மேலும் வலுக்கும் என்று தெரிகிறது.
சானியா மிர்சாவுக்கும் சோயப் மாலிக்கிற்கும் வருகின்ற 15_ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இந்தநிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மற்றொரு ஆயிஷா சித்திக் என்ற பெண் ஒரு பயங்கர குண்டை தூக்கிப்போட்டார். அதாவது எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்துவிட்டது. அதனால் என்னை விவகாரத்து செய்யாமல் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டால் மாலிக் மீது போலீசில் புகார் செய்வேன் என்று கூறியிருந்தார்.

இந்தநி+லையில் ஆயிஷா கூறியுள்ள புகாரை மாலிக் மறுத்துவிட்டதோடு ஆயிஷாவை நான் பார்த்ததே இல்லை என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி மாலிக் மீது ஆயிஷா குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். இந்த புகாரின்பேரில் மாலிக்கிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதோடுமட்டுமல்லாது மாலிக் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் எனக்கும் மாலிக்கிற்கும் தொலைபேசியில் திருமணம் நடந்தது உண்மைதான் என்றும் அவரும் நானும் பலமுறை உடல் உறவு கொண்டுள்ளோம் என்றும் அதனால் நான் ஒரு சமயத்தில் கர்ப்பிணியானேன் என்றும் ஆயிஷா தொலைபேசியில் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். ஆனால் குழந்தை பெற முடியால் கரு களைந்து விட்டது என்றும் ஆயிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் எந்தெந்த இடத்தில் தங்கி உடல் உறவு வைத்தோம், கர்ப்பணியானது எப்போது,எந்த நேரத்தில் கரு களைந்தது என்ற விபரத்தை ஆயிஷா கூறவில்லை. எனக்கு சிகிச்சை எடுத்த பெண் டாக்டர் பாத்திமா என்பவர்தான் நான் கருவுற்றதை உறுதி செய்து கூறினார் என்றும் ஆயிஷா தெரிவித்தார். ஆனால் டாக்டர் பாத்திமா எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்பதோடு ஐதராபாத்தில் பாத்திமா என்ற பெயரில் ஏராளமானோர் இருப்பதால் ஆயிஷா கூறியுள்ள பாத்திமா என்ற டாக்டரை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயத்தில் நான் கருவுற்றதை சரியான நேரத்தில் நிரூபித்துக்காட்டுவேன் என்றும் ஆயிஷா கூறியுள்ளார். சோயப் பொய் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் அவர் மாறி மாறிப்பேசுகிறார். கடந்த ஆண்டு டி.வி.க்கு பேட்டி அளித்த மாலிக், என்னை சந்தித்ததாகவும் என்னை அத்தை என்றும் கூறினார். இனி என்னை பாட்டி என்று கூட அவர் கூறுவார் என்று மாலிக் அந்த பேட்டியில் ஜோக் அடித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr