இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழில் இவ்வருடம் சிறுமிகள் மீதான 32 பாலியல் வன்முறைச் சம்பவங்கள்

JKR  வியாழன், 15 மார்ச், 2012


யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் சிறுமிகள் மீதான 32 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், பெண்கள் மீதான 38 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கடந்த 2010ஆம் ஆண்டு பெண்கள் மீதான பாலியல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 102ஆக இருந்ததெனவும் 2011ஆம் ஆண்டு இது 182ஆக அதிகரித்திருந்ததெனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர் இல்லங்களிலேயே இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr