![]() |
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID) கணினிப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவுவதற்கும், யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதியருக்கு தொழிற் திறமைகளில் பயிற்சி அளிப்பதற்கும் மேற்படி கணினிகளை வழங்கியுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, கணினிப் பயிற்சி நிலையமொன்றை நிறுவுவதற்காக, யாழ்ப்பாணத்திலுள்ள அகில இலங்கை இந்து காங்கிரஸ் ஆராய்ச்சி, ஆய்வு மையத்திற்குக் கணினிகளை வழங்கியது.
அகில இலங்கை இந்து காங்கிரஸானது, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, மைக்ரோஸொஃப்ட், இன்போர்ஷெயார் என்பவற்றினால் நிதியிடப்பட்ட ஒரு செயற்திட்டமான, வரையறுக்கப்படாத உள்ளார்ந்த தோழமை நிகழ்ச்சித்திட்டத்தின் (UPP) பயிற்சி நிறுவனமாகும்.
புதிய வளங்களைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்திலும் அதைச் சூழ்ந்துள்ள கிராமப் பிரதேசங்களிலும், பாதகமான, வசதியற்ற நிலையில் உள்ளோருக்கும் உள் நாட்டில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும், இம்மையம் தகவல் தொழில்நுட்ப (IT) திறமைகளில் பயிற்சியை வழங்கும். விசேஷமாக, ஊடகத் துறையிலும் சுற்றுலாத் துறையிலும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு இப்பயிற்சி உதவும்.
பணிப்பாளர் ரெபேக்கா கோன்
அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிக்குழுப் பணிப்பாளர் ரெபேக்கா கோன்,
"மேலும் சிறந்த தொழிற் திறமைகளை விருத்தி செய்வதற்கு ஆர்வம் கொண்டுள்ள நூற்றுக்கணக்கான இளையோருக்கு உதவுவதற்காக, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தப் புதிய தகவல் மையத்திற்கு ஆதரவு வழங்குவதில், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி மகிழ்ச்சியடைகின்றது.
மோதலினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களை மீளக் கட்டியெழுப்புவதற்காகவும், எதிர்காலத்தில் மேலும் சிறந்த தொழில்களுக்கு, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இளையோரை ஆயத்தப்படுத்துவதற்கு உதவுவதற்காகவும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி தன்னை அர்ப்பணித்துள்ளது"என்று கூறினார்.
சுற்றுலாத்துறை, ஆடைத் தயாரிப்புத்துறை, ஊடகத்துறை, விவசாயத்துறை போன்றவற்றில் தொழிற்சேனையை அபிவிருத்தி செய்வதற்கு, வரையறுக்கப்படாத உள்ளார்ந்த தோழமை (UPP) நிகழ்ச்சித் திட்டம், இலங்கை முழுவதிலும் தகவற் தொழில்நுட்பப் பயிற்சியை வழங்குகின்றது.
2010ஆம் ஆண்டளவில் 11,250இற்கும் மேற்பட்ட இளையோருக்கு அடிப்படைத் தகவற் தொழில்நுட்பத்தை வழங்கும் அரசாங்கப் பயிற்சி நிறுவனங்களுடனும், தனியார் பயிற்சி நிறுவனங்களுடனும் சேர்ந்து இச்செயற் திட்டம் இயங்குகின்றது. தொழில் வாய்ப்புக்கள் பெருமளவில் காணப்படும் சுற்றுலாத் துறையிலும் ஊடகத் துறையிலும் பயிற்சி வழங்குவதில் இந்த யாழ்ப்பாணத் திட்டம் கவனஞ் செலுத்தும்.
1996ஆம் ஆண்டு முதல், யாழ்ப்பாணத்தில் வசதி குறைந்தோருக்குத் தர்ம சேவைகளையும் சமூக சேவைகளையும் வழங்கிவரும் அகில இலங்கை இந்து காங்கிரஸுடன் இணைந்து, வரையறுக்கப்படாத உள்ளார்ந்த தோழமை நிகழ்ச்சித் திட்டத்தின் கலைத்திட்டம் (பாட விதானம்), இம்மையத்தில் பயன்படுத்தப்படும்.
அ.இ.இந்து காங்கிரஸின் பொதுச் செயலாளர்
அகில இலங்கை இந்து காங்கிரஸின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி கந்தையா நீலகண்டன்,
"நமது இளையோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த உதவி நமக்குத் தேவைப்படுவதால் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி வழங்கும் இவ்வாதரவுக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத் தமது அறிவையும் திறமைகளையும் உகந்த அளவில் யாழ்ப்பாண இளையோர் பெற்றுக் கொள்ள விரும்பும் இத்தருணத்தில் வழங்கப்படும் இந்த உதவியையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்"என்றார்.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக, அமெரிக்க மக்கள், ஏறத்தாழ 50 வருடங்களாக, உலகம் முழுவதிலுமுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.
இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1946 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, இலங்கையில் ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது























0 கருத்துகள்:
கருத்துரையிடுக