ஆந்திராவில் மறைந்த முதல்வர் ராஜசேகரரெட்டியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு காங். அலுவலகங்களை அவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.
வன்முறையாளர்கள் 2 அரசு பஸ்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறந்தார். அவரது மறைவு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தந்தையின் முதல்வர் பதவி மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவு கோஷ்டியினர் ஆதரவு கரம் உயர்த்தினர்.
தற்காலிக முதல்வர் ரோசய்யாவுடன் மீண்டும் ஒரு முறை புதிதாக அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்ற போது, ரெட்டி மகன் ஆதரவாளர்கள் சிலர் பதவி ஏற்க வருவார்களா என்ற சந்தேகம் எழுந்ததது.
காங். உயர் கமிட்டி ரோசய்யாவே முதல்வராக இருப்பார் என அறிவித்தது. மேலும் சோனியாவின் உத்தரவை அடுத்து ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் அமைதியாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக