இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரதி அமைச்சர் பாயிஸின் சாரதி மீது புத்தளத்தில் துப்பாக்கி சூடு

JKR  வெள்ளி, 25 செப்டம்பர், 2009


கால் நடைவளத் துறை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் சாரதி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை(25) புத்தளம் நூர் நகர் புகையிரத நிலைய வீதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.

பிரதி அமைச்சரின்; வாகனச் சாரதியான எம்.ஹபீல் என்பவரே சூட்டுக காயங்களுக்குள்ளானவராவார்.

மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது :

பிரஸ்தாப சாரதிணீ நூர் நகர பகுதியில் உள்ள வீட்டுக்குள் தமது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி செல்ல முற்பட்ட போது.அங்கு வந்த வந்த மூவர் இவரின் கைப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக வைத்திய சாலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ரிப்பிடர் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளே இச்சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பெலீஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து புத்தளம் உதவி பொலீஸ் அத்தியட்சகர் சகதபால தலைமையிலான பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr