இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உ.பி. வந்தார் ராகுல் - தலித் வீட்டில் தங்கினார் - மாயா டென்ஷன்

JKR  வியாழன், 24 செப்டம்பர், 2009


ஷிரவஸ்தி (உ.பி): காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி நேற்று இரவு திடீரென உ.பி. வ்நதார். ஷிரவஸ்தியில் உள்ள கிராமம் ஒன்றில் தலித் ஒருவரின் வீட்டில் தங்கினார். இந்த வருகையை முதல்வர் மாயாவதி கட்சி குறை கூறியுள்ளது.

காங்கிரஸ் தலித்களின் நண்பன் என்பதை உணர்த்தும் நோக்கில் ராகுல் காந்தி தலித் மக்களின் வீடுகளில் தங்கி வருகிறார். குறிப்பாக உத்தர பிரேதசம் மாநிலத்தில் தலித்களின் வாக்கு வங்கியை தன்னிடம் வைத்திருக்கும் மாயாவதிடம் இருந்து அதை பறிக்க முயன்று வருகிறார்.

இதற்காக கிராமங்களில் இருக்கும் தலித் வீடுகளி்ல் தங்கும் தனது திட்டத்தை தொடர்ந்து செயல்படு்த்தி வருகிறார்.

நேற்று உத்தரபிரேதசம் மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தில் ராம்நகர் பகுதிக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர் ஷிரவஸ்தி மாவட்த்தில் உள்ள சுட்கய்தை கிராமத்தில் சேடி பஸி என்ற தலித் வீட்டில் தங்கினார்.

இன்று காலை அருகில் இருக்கும் தில்ஹர் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்றார். அங்கு குழந்தைகளை சந்தித்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

ராகுலின் இந்த வருகை உள்நோக்கம் கொண்டது என பகுஜன் சமாஜ் கட்சி வர்ணித்துள்ளது. ஆனால் இது வழக்கமான ஒன்று என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் விளக்கியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr