இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அதிகாலையில் ஓடலாமா?

JKR  வெள்ளி, 25 செப்டம்பர், 2009


மலைப்பாதைகளில் சைக்கிள் ஓட்டுவது, நல்ல பனியிலும் மலை ஏறுதல், பனிச்சறுக்கு விளையாட்டு, சாலைகளில் ரோலர் ஸ்கேட்டிங் செல்லுதல் என்று திறந்த வெளியில் செய்யும் விளையாட்டுக்களில் கிடைக்கும் அனைத்து நன்மைகளும், காலையில் திறந்த வெளியில் ஓடும் அல்லது துரித நடையில் செல்லும் அனைவருக்கும் கிடைக்கும்.

தினமும் அதிகாலையில் குளிர்ந்த காற்று வீசும் போது முப்பதே முப்பது நிமிடங்கள் மட்டும் ஓடுங்கள். அதுவும் இலக்கு நிர்ணயிக்காமல் இன்று அந்தப்பக்கம், நாளை இந்தப் பக்கம் என்று ஓடுங்கள். நகரத்தின் சாயல்கள் இல்லாத இடமாக இருந்தால் மிக நல்லது.

உடற்பயிற்சி நிலையங்களிலும், வீட்டிலும் உடற்பயிற்சி செய்வதை விட இது நல்லது.

பிரிட்டனில் நடப்பதில் அலுக்காத மக்களுக்காக பிரிட்டீஷ் ராம்பிளர்ஸ் உள்ளது. இதில் 1,12,000 பேர் உறுப்பினர்கள், இவர்களில் 42 சதவீதத்தினர் பேர் பெண்கள். கடந்த மூன்றாண்டுகளில், இப்படி அதிகாலையில் ஓடவும், நடக்கவும், வந்துள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

காரணம் என்ன? உடல் மெலிவது மட்டுமல்லை; வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ, இப்படி அதிகாலையில் 30 நிமிடங்கள் மட்டும் ஓடுவது அல்லது துரிதமாக நடப்பது உதவுகிறது என்று விளையாட்டுத் துறையைச் சேர்ந்த மனோதத்துவ டாக்டர் டாம்காக்ரில் கூறுகிறார்.

காலையில் சாலைகளில் ஓடுபவர்கள் ஒரு மைல் தூரத்தை (1.6 கி.மீ) நிமிடங்களில் கடந்தால், கால்கள் விரைந்து அழகிய வடிவமாக மாறும். காரணம், இச்செயலால் 337 கலோரி எரிக்கப்படுகிறது.

கவலையும் பிரச்னையும் உள்ளவர்கள் பக்கத்து ஊர்களுக்கு ஓடலாம். துரித நடை நடக்கலாம். இதனால், 266 கலோரி எரிக்கப்படுகிறது. மனமும் உடலும் புதுப்பிக்கப்படும். திரும்பும்போது, அந்த ஊரிலிருந்து உடனடியாக பேருந்தில் வரவேண்டும்.

சிறு பிராயணப் பையை முதுகில் சுமந்துகொண்டு நடந்து சென்றால், தொடைகளும் நுரையீரல்களும் நன்கு பலம் பெறும். இதன் மூலம் 228 கலோரி செலவாகும்.

உள்ளுக்குள் நம்பிக்கையையும் வெளியில் அழகான துடிப்பான தோற்றத்தையும் காலை நேர ஓட்டம் தருவதால், அதற்காக தினமும் 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள். இதனால் உடல் நலம் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார் ஃபிட்னஸ் நிபுணரான டாக்டர் ஏஜெக்ஸ் ரீஸ்.

என்ன, ஓடத் தயாராகிவிட்டீர்களா?

மூட்டு வலி குணமாக!

மூட்டு வலி, முழங்கால் வீக்கம், இரத்தக் கொதிப்பு, கல்லீரல் மற்றும் பித்தக் கோளாறுகள் உள்ளவர்கள் தினமும் இரண்டு அல்லது நான்கு வாழைப்பழங்கள் சாப்பிடவும். உடனே குணமாகும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு விரைவாக உடல் திசுக்களை சுத்தம் செய்து சீரமைப்பு செய்து விடுவதால் மூட்டு வலி உடனடியாக குணமாகும். உணவுக்கு முன்பு நான்கு பழங்கள் சாப்பிட்டால் எப்போதும் சாப்பிடுவதைவிட 1/4 பங்கு உணவு மட்டும் சாப்பிடுவது நல்லது. இதனால் நெஞ்சு வலியும் இரத்தக் கொதிப்பும் குணமாகும்.

ஊளைச்சதை உடனே குறைய!

சிஸ்டைன் என்ற அமினோ அமிலமும் வைட்டமின் சியும் தொடர்ந்து உணவில் இடம் பெற்றால் நலம். உணவுக்குப் பிறகு வைட்டமின் ‘சி’யை மாத்திரையாகவும் சாப்பிடலாம். சோயாபீன்ஸ், கீரை, பால், பேரீச்சம்பழம், அரிசி இந்த ஐந்திலும் சிஸ்டைன் அமிலம் நிறைய இருக்கிறது. ஊளைச் சதைக்காரர்கள் முதலில் 15 நாட்களுக்கு தினமும் 5 எலுமிச்சம் பழங்களை மட்டும் மூன்று வேளை சர்பத்தாக மாற்றி அருந்தினால் உடனே ஊளைச்சதை குறையும். இந்த உண்ணாவிரத நாளில் ஓய்வு எடுக்காமல் உங்கள் அன்றாடப் பணிகளைப் பார்க்கலாம். 15 நாட்கள் கழித்து அளவான உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் போதும். பதினைந்து நாட்களும் எலுமிச்சையிலேயே வைட்டமின் சி தொடர்ந்து கிடைப்பதால் உடலும் சோர்வுறாமல் இருக்கும். வைட்டமின் சியும, சிஸ்டைன் அமிலமும் ஊளைச்சதை ஏற்படாமல் கட்டுப்படுத்துவதாக நியூயார்க்கில் உள்ள நாசெள கன்ட்ரி மெடிக்கல் சென்டரின் சத்துணவு ஆய்வுக் கமிட்டி கண்டுபிடித்துள்ளது.
வாயைக்கட்டும் மன உறுதி மட்டுமே நமக்குத் தேவை!.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr