இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மாவோயிஸ்ட் தாக்கியதில் 17 இந்திய காவல்துறையினர் பலி

JKR  சனி, 10 அக்டோபர், 2009

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறை நிலையத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்ட இழப்பு விபரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த வாரம் பீஹாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 கிராம மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் காவல்துறை நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 150 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr