இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மன்னார் அடம்பனில் மீள்குடியேறிய மக்களுக்கு புளொட் துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு!

JKR  செவ்வாய், 16 பிப்ரவரி, 2010


மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலருக்கு இன்றையதினம் புளொட் அமைப்பினரால் ஒரு தொகுதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முருங்கனில் உள்ள புளொட் காரியாலயத்தில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

லண்டனிலுள்ள தர்மலிங்கம் நாகராஜா என்பவரால் அன்பளிப்பாக புளொட் அமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்த இந்த சைக்கிள்கள் அடம்பனில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களில் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தனுடன், முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன், வவுனியா நகரசபை உறுப்பினர் குமாரசாமி, முருங்கன் புளொட் அமைப்பாளர் சிவசம்பு, மகளிர் அமைப்பு பொறுப்பாளர் ஜெஸ்மின் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr