இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மற்றவர்களின் குற்றச்சாட்டு பற்றி நான் கவலைப்படவில்லை : ஜனாதிபதி

JKR  வெள்ளி, 12 மார்ச், 2010

மற்றவர்களின் குற்றச்சாட்டுக்கள் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. நான் ஒற்றை ஆட்சி பற்றிப் பேசிய போதெல்லாம் அது வெறும் கனவு என்றார்கள். அதனால் என்ன கிடைக்கப்போகிறது எனச் சிலர் கேட்டார்கள். ஆனால் நான் செய்துகாட்டினேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட ‘மகிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு' கொள்கைப் பிரகடனம் தொடர்பான விசேட சம்மேளனம் இன்று சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

"எந்தவொரு விடயத்தையும் செய்யத் தொடங்கும் முன்னர் அதைச் செய்வதனால் நாட்டுக்கு நன்மையிருக்கிறதா என்பதை நான் சிந்தித்துத் தான் செயலாற்றுகிறேன். மகிந்த சிந்தனை பலராலும் விமர்சிக்கப்பட்டது. உரம் 350 ரூபாவுக்கு வழங்க முடியாது என்றார்கள். நான் அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்தேன்" என அவர் அங்கு மேலும் கூறினார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr