இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நிபுணர்கள் குழு அமைப்பது குறித்து விஜய் நம்பியார்-பாலித கோகண பேச்சு : ஐநா செயலர்

JKR  வியாழன், 25 மார்ச், 2010

இலங்கை விடயம் குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக பாலித கொஹணவுக்கும், விஜய் நம்பியாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பாலித கொஹண மற்றும் பான் கீ மூனின் சிரேஷ்ட ஆலோசகர் விஜய் நம்பியார் ஆகியோருக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் குறிப்பிடப்படுகிறது.
நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பிலான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியாம் பெஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்கத்துடன் நிபுணர்கள் குழு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்கக் கூடியவர்களைப் பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr