இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கள்ளக்காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற பெண் கைது

JKR  சனி, 8 மே, 2010


பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்த கள்ளக்காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றார் ஒரு பெண்.
கேரள மாநிலம் காயங்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் அரபு நாட்டில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மிஷியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரில் படித்து வருகிறார். இளைய மகன் மிஷியாவுடன் உள்ளார்.
இரு தினங்களுக்கு முன் இவர்களது வீட்டில் வாலிபர் ஓருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காயங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் இறந்து கிடந்த வாலிபர் உடலில் விஷம் கலந்து இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இறந்து கிடந்த வாலிபர் கொல்லம் நீண்டகரை பகுதியை சேர்ந்த சுனில் என்பதும் தெரிய வந்தது. மிஷியாவுக்கும், சுனிலுக்கும் கள்ள காதல் இருந்தது வந்துள்ளது. அடிக்கடி மிஷியா வீட்டுக்கு இவர் வந்து செல்வார். மிஷியாவுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
இந்த தொந்தரவு தாங்காமல்தான் சம்பவதன்று குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சுனிலை மிஷியா கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து மிஷியாவை காயங்குளம் போலீசார் நேற்று கைது செய்தனர். காயங்குளம் குற்றவியல் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr