இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில்

JKR  திங்கள், 3 மே, 2010

வடக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். .
அவர் அங்கு மேலும் கூறுகையில், "கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் வடக்கு மாகாண சபை தேர்தலையும் நடத்தவேண்டிய தேவை உள்ளது. .
ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் ஓர் அங்கமாகவே இவற்றை மேற்கொள்கின்றோம். முக்கியமாக வடக்கு மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். .
தேர்தலை நடத்துவதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும் விரைவில் இது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். இவையனைத்தையும் கட்டம் கட்டமாகவே மேற்கொள்ள முடியும்" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr