இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ்.பருத்தித்துறை கொழும்புக்கிடையிலான பஸ் சேவை ஆரம்பம் _

JKR  சனி, 1 மே, 2010

யாழ். பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ முகாமையாளர் மு. குலவால் செல்வம் தெரிவித்தார்.
பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்குமான பஸ் சேவை இன்று முதல் தினமும் காலை 7 மணிக்கு இடம்பெறும் இதற்கென இரண்டு புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அம்பாறைக்கும் தம்புள்ளைக்கு இடையிலான புதிய பஸ் சேவை ஒன்றை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இந்த புதிய பஸ் சேவையும் இன்று முதல் அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தம்புள்ளை டிப்போ முகாமையாளர் நு.மு.சரத் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த பஸ் அம்பாறையில் இருந்து 2.30 அளவில் மீண்டும் தம்புள்ளை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr