யொஹெய் சசகாவ நேற்று (7) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இதன் போது கருத்துத் தெரிவித்த அவர் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் நாட்டு பிரதான வியாபாரிகளை ஊக்குவிக்க உள்ளதாகவும் கூறினார்.
இதனூடாக இலங்கையில் பெருமளவு தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்று கூறிய அவர், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உச்ச ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். 1981ஆம் ஆண்டு முதல் நிபொன் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இவர் உலக சுகாதார ஸ்தாபன ஆபிரிக்க லத்தின் அமெரிக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி ஒன்றிய நாடுகளுக்கான விசேட ஆணையாளராகவும் பணியாற்றுகிறார். ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக