இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உறவுகளை தேடும் உள்ளங்கள்

JKR  திங்கள், 21 ஜூன், 2010

இலங்கையின் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனதாக கூறபப்டுபவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்று மட்டக்களப்பு நகரில் நடை பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது உறவினர்கள் காணாமல் போன சம்பவங்கள் மற்றும் அதற்கான பின்னிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாய் மூலமும், எழுத்து மூலமும் எடுத்துக் கூறி அவர்களை கண்டு பிடித்து தருமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் நூற்றுக்கும் அதிகமானவர்களின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான பொன் செல்வராஜா கூறுகிறார்.
கிழக்கு மாகாணத்தில் மக்கள் காணாமல் போன சம்பவங்களுக்கு பாதுகாப்பு படையினரும், அந்த மாகாணத்தில் செயற்படும் சில ஆயுதக் குழுக்களுமே காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr