இந்த வரவு செலவுத்திட்டமானது யுத்தம் முடிந்த பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்யும் சூழலில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இதை அபிவிருத்திக்கான வரவு செலவுத்திட்டமாகக் குறிப்பிடலாம்.
அதேவேளை இந்த வரவு செலவுத்திட்டமானது போர் முடிந்த பிறகு அந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் அந்தப் பிரதேசங்களினதும் மறுவாழ்வையும் மீளமைப்பையும் செய்வதற்கான உள்ளடக்கங்களைக் கொண்டு அமைய வேண்டுமெனக் கருதுகிறேன். இடப்பெயர்வின் துயரத்தையும் அது ஏற்படுத்திய வாழ்வின் கடினங்களையும் சுமந்தபடி மீள்குடியேறிய கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்களினுடைய குரல்களைப் பதிவுசெய்யுமாறு காலம் எனக்குப்பணித்துள்ளது.
அதேவேளை முழுநாட்டினுடைய நலனுக்கு அவசியமான விடயங்கள் குறித்தும் என்னுடைய கவனத்தைப் பதிவுசெய்கிறேன். எனவே இவற்றின் அடிப்படையிலேயே இந்த மன்றில் என்னுடைய உரையைச் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக