இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிவாஜி வளர்த்த யானை சாவு-பேத்தி அஞ்சலி

JKR  வெள்ளி, 16 ஜூலை, 2010

தனது மகள் ஆசைப்பட்டதற்காக வீட்டில் வைத்து வளர்த்து பின்னர் திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு நடிகர் சிவாஜி கணேசன் தானமாக கொடுத்த யானை சாந்தி நேற்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தது.

தனது மகள் சாந்தி ஆசைப்பட்டார் என்ற காரணத்திற்காக ஒரு யானைக் குட்டியை வாங்கி வளர்த்து வந்தார் சிவாஜி. தனது மகளின் பெயரையே இந்த யானைக்கு சூட்டி வளர்த்து வந்த சிவாஜி பின்னர் அது வளர்ந்ததும் யானையை திருவானைக்காவல் கோவிலுக்கு தானமாக அளித்தார்.
கடந்த 1964ம் ஆண்டு இந்த யானை தானமாக தரப்பட்டது. அன்று முதல் யானை அங்கு வளர்ந்து வந்தது. இந்த நிலையில் வயோதிகம் காரணமாக யானைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. ஆனால்கோவில்நிர்வாகம் யானையை சரிவரப் பரமாரிக்கவில்லை என்றுதெரிகிறது. இந்த நிலையில் யானைக்கு வலது கண்ணில் பார்வை பறிபோனது.
2 நாட்களுக்கு முன்பு கோவிலுக்குள் யானை தடுமாறி விழுந்து விட்டது. இதனால் உடல் நலம் மேலும் மோசமானது. இந்த நிலையில் நேற்று காலை சாந்தி இறந்து போனது.
இதனால் பக்தர்கள் கவலையும், சோகமும் அடைந்தனர். மக்கள் பெரும் கூட்டமாக திரண்டு வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினர். பால், பழம் வைத்து சூடம் காட்டி வணங்கினர்.
யானை சாந்தி இறந்த தகவல் அறிந்ததும், சிவாஜி கணேசனின் பேத்தி விஜயலட்சுமி தனது குடும்பத்தினருடன் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் யானையின் உடலை கிரேன் மூலம் தூக்கிச் சென்று கோவில் வளாகத்திற்குட்பட்ட பகுதியில் அடக்கம் செய்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr