இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நோர்வேயில் புலிகள் மோதல். நெடியவன் உட்பட ஆறு பேர் பலத்த காயம் சிலரை நோர்வே போலீசார் கைது செய்துள்ளனர் புகைப்படம் இணைப்பு

JKR  திங்கள், 9 ஆகஸ்ட், 2010

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூவர் தமிழர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வே தமிழீழ கௌன்சிலின் உறுப்பினர்களுக்கும் நோர்வே தமிழ் பொருளாதார பிரிவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் தொடர்பாக எழுந்த கருத்து முரண்பாடே மோதலுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மோதலில் நோர்வே தமிழ் பொருளாதார கழகத்தின் உறுப்பினர் சிவகணேஸ் வடிவேலு காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr