இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கிய யுவதிக்கு சாதகமாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

JKR  வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010


இலங்கைக்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கிய 17 வயது யுவதியான ரிப்கா பாரி தொடர்ந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் வகையில் ஒஹையோ மாநில நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
தனது இஸ்லாமிய பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிய இந்த யுவதியை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ப்பதற்கு அவரின் பெற்றோர்கள் முயற்சித்தனர். அதேவேளை இது சாத்தியமற்றது என அறிவிக்கக் கோரி ரிப்கா பாரியின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரிப்காவுக்கு 18 வயது பூர்த்தியடைவதால் குடும்பத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என நீதவான் மேரி குட்ரிச் தீர்ப்பளித்தார். அதேவேளை, இலங்கைக்குத் திரும்புவது ரிப்காவின் நலன்களுக்கு மிக உகந்ததாக இருக்காது எனவும் நீதிவான் கூறினார்.
ரிப்கா பாரி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். எனினும்,; கர்ப்பப்பை புற்றுநோய்குள்ளாகியுள்ள ரிப்கா, தனது சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கிருப்பதற்கு விசேட அனுமதி கோரும் மனுவை அவரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்வதற்கு இத்தீர்ப்பின் மூலம சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr