இதன்போது, ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான மூன்றாவது சாட்சியாளராக லக்ஸ்மன் செனவிரத்ன எம்.பி மன்றுக்கு சமூகமளித்ததுடன் அவருக்கு எதிராக சாட்சியமளித்ததாக இராணுவ ஊடக பிரிவு அதிகாரியான கேனல் துமிந்த கமகே இணையதளத்துக்கு தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் எச்.எல்.வீரதுங்கவின் தலைமையிலான நீதிபதிகள் முன்னால் வழக்கு தொடுனர் மூன்றாவது சாட்சியாளரை அழைத்து விசாரித்த நிலையில் குறித்த விசாரணைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி, சமூகமளிக்காத நிலையிலும் ஓகஸ்ட் 12ஆம் திகதி காலை 9 மணிக்கு இராணுவ நீதிமன்றம் விசாரணையைத் தொடரும் என உத்திரவிடப்பட்டதாக கேனல் கமகே கூறினார்.
இதன்படி நாளை 11ஆம் திகதி முன்னர் கூறியபடி இராணுவ நீதிமன்றம் கூடமாட்டாது என்றும் நாளை மறுதினம் விசாரணைகள் தொடரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சேவையில் ஈடுபட்டிருந்த போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளுக்காக முதலாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்பட்டது. இதன் ஏனைய நீதிபதிகளாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர்.விஜேதுங்க மற்றும் மேஜர் ஜெனரல் டீ.ஆர்.பீ.ஜயதிலக்க ஆகியோர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது























0 கருத்துகள்:
கருத்துரையிடுக