இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அபிவிருத்திக்கான தடைகளை அகற்றவே அரசியலமைப்புத் திருத்தம்

JKR  செவ்வாய், 7 செப்டம்பர், 2010

ரசியலமைப்பு, சட்டங்கள் என்ற வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தடையாக உள்ளவற்றை அகற்றவும் இன முரண்பாடுகளுக்கு தீர்வை வழங்கும் வகையில் உறுதியான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கம் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செய்யவுள்ளது என சுகாதார அமைச்ச்சரும் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்
.இன்று மாலை மகாவலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன், 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு மேலாக தேர்தல் முறையிலும் மறுசீரமைப்புக்களை கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
18ஆவது திருத்தம் பற்றிய கருத்தாடலுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் அவசரமாக கொண்டு வரப்படுகின்றது என்ற ஐக்கிய தேசிய கட்சியின் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 1978 அரசியலமைப்பு, 13ஆவது திருத்தம் என்பவற்றுக்கு எவ்வளவு காலம் வழங்கப்பட்டது எனக் எனக் கேள்வி எழுப்பினார்.
மலேஷியா, சிங்கப்பூர், தென் கொரியா என்பன கடந்த சில தசாப்தத்தில் அபிவிருத்தியில் பெற்ற சாதனைகளுக்கு உறுதியான அரசாங்கமும் தனியொரு தலைவரின் அல்லது கட்சியின் மாறாத கொள்கைகளுமே காரணம் என மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr