இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரெஞ்சு நாட்டு கப்பல் திருகோணமலையை வந்தடைந்துள்ளது

JKR  செவ்வாய், 16 நவம்பர், 2010

பிரெஞ்சு நாட்டின் லீ. டயமன்ட் உல்லாசப் பயணிகள் கப்பல் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலை அஸ்ரப் துறை முகத்தை வந்தடைந்துள்ளது.

பிரெஞ்சு (சி.எம்.ஏ, சி.ஜி.எம்) நிறுவனம் உலகத்தில் 3ஆவது கண்டெய்னர் சிப்பிங் நிறுவனமாக திகழ்கின்றது.
77 பயணிகளுடன் வருகை தந்துள்ள இக் கப்பல் இம் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு துறை முகத்தை வந்தடைந்தது.
15ஆம் திகதி காலி துறை முகத்தையும் இன்று திருகோணமலை துறை முகத்தையும் வந்தடைந்துள்ளது.
ஆடம்பர உல்லாச பயணிகள் கப்பலான இது 113 அறைகளையும் நீர்தடாகம் வர்த்தக நிலையம் நூலகம் உட்பட பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.
குறித்த கப்பலின் கெப்டன் ஹேர்வன் லீ ரூசி கூறும் போது, எமது இப் பயணம் மனதுக்கு மகிழ்ச்சியை தருகின்றது.
இலங்கையில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து 30 வருடங்களின் பின்னர் இங்கு நாம் வந்துள்ளோம்.
இன்று ஒரு நாள் சுற்றுலாப் பயணமாக அமைய உள்ள இப் பயணத்தில் எமது உல்லாசப் பயணிகள் தம்புள்ள, பொலநறுவை, நிலாவெளி, மாபிள்வீச் முதலான இடங்களைப் பார்வையிட உள்ளனர்.
இன்று மாலை எமது பயணம் மீண்டும் தொடர உள்ளது. இதனையடுத்து சென்னைக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr