இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நடிகை சரண்யா மாயம்

JKR  திங்கள், 29 நவம்பர், 2010

காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவரும், பேராண்மை படத்தின் நாயகிகளில் ஒருவருமான சரண்யாவைக் காணவில்லை என்று அவரது தாயார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் சரண்யா. அப்படத்தில் இவர்தான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தி் சந்தியா நாயகியாகி விட்டார். இருந்தாலும் சரண்யாவை, சந்தியாவின் தோழியாக நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் பாலாஜி.
பின்னர் பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது மழைக்காலம் என்ற படத்தில் தனி நாயகியாக நடித்து வருகிறார். இவரை 3 மாதங்களாக காணவில்லையாம். இதுகுறித்து இப்போது புகார் கொடுத்துள்ளார் அவரது தாயார்.
இதுகுறித்து அவரது தாயார் மஞ்சுளா போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்தார்.
அதில், என் மகள் சரண்யா காதல் படத்தில் அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்துள்ளார். நான் கோடம்பாக்கம் தங்கா நகரில் மகளுடன் வசித்து வந்தேன்.
மூன்று மாதத்துக்கு முன்பு திடீரென்று சரண்யா மாயமானார். அவளை எங்கே தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. அப்போதும் வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை.
சரண்யா படங்களில் நடித்ததால் அளவுக்கு அதிகமாக அவரிடம் பணம் உள்ளது. யாரோ தூண்டி விட்டு சரண்யாவை என்னுடன் வரவிடாமல் தடுக்கின்றனர்.
நான் தனியாக கஷ்டப்படுகிறேன். எனக்கு 3 ஆபரேஷன் நடந்துள்ளன. அப்போதும் அவள் பார்க்க வரவில்லை. சரண்யாவை கண்டு பிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மஞ்சுளா கூறுகையில், ஷூட்டிங் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு மூன்று மாதங்களுக்கு முன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். உடல்நிலை சரி இல்லாத நிலையிலும் பார்க்க வரவில்லை. யார் பிடியிலேயோ அவர் இருக்கிறார்.
எனது சொத்தில் கூட இனிமேல் உரிமை கொண்டாட முடியாது. அவரது நிலைமை என்ன ஆனது என்று எனக்கு பயமாக இருக்கிறது என்றார் மஞ்சுளா

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr