இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமைச்சர் டக்ளஸ் குற்றவாளியல்லர் :சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

JKR  வியாழன், 9 டிசம்பர், 2010

ந்தியாவால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி அல்லர் என்று சென்னை மேல்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருநாவுக்கரசு என்கிற தலித் இளைஞன் சென்னையில் 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கீழ்நிலை நீதிமன்றம் ஒன்றால் தேடப்படும் குற்றவாளியாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதற்கு எதிராக இவர் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
பிடியாணை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என கீழ்நிலை நீதிமன்றத்திடம் தேவானந்தா கோர வேண்டும் என தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவானந்தா கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் டில்லி வந்திருந்தபோது இப்பிடியாணை உத்தரவால் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்தே மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr