அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவரது சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளனர்.
இராணுவத்திற்கு நிதி சேகரிக்கும் ‘அபிவெனுவென் அபி’ திட்டத்திற்கு 2 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக அவர்கள் வழங்கியுள்ளனர்.
இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கப்பம் கோரி அச்சுறுத்துபவர்கள் குறித்து உடனடியாக அறியத்தந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக