முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடனான பேட்டியின் குறிப்புக்களை பிரெட்ரிகா ஜேன்ஸ் பதிவு செய்திருந்த குறிப்பு புத்தகத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்ட போது இருந்த மாதிரி இப்போது இல்லை என அவர் கூறினார்.
அதில் இரண்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. கிழித்ததற்கான அடையாளமாக ஓர் அங்குல அகலமான கடதாசி மீதி உள்ளது என அவர் கூறினார்.
பிரெட்ரிகா ஜேன்ஸின் சட்டத்தரணி என்.எம்.சஹீட், சிரஸ செய்தி வாசிப்பாளர் ஓமாயா மடவெல விதானகே, புலனாய்வு பொலிஸ் பிரிவை சேர்ந்த டப்ளியூ.பி.எஸ்.ஐ.அபேரட்ன, உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரும் சாட்சியமளித்தனர்.
குறித்த வழக்கு நாளை வியாழக்கிழமையும் தொடரவுள்ளது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக