Pages

புதன், 2 பிப்ரவரி, 2011

தபால் மூல வாக்களிப்பு மார்ச் 8, 9ஆம் திகதிகளில்

டைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மார்ச் 8, 9 ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

மார்ச் 17ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் 301 சபைகளுக்கு 3931 –உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 இலட்சத்திற்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தபால்மூல வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை, அரச திணைக்களங்களினால் வழங்கப்படும் அலுவலக அடையாள அட்டை மற்றும் தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பயன்படுத்தி தமது வாக்குகளை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’