இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

'ஹசான் திலகரட்னவுக்கு பாதுகாப்பளிக்க அரசாங்கம் தயார்'

JKR  திங்கள், 9 மே, 2011

லங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹசான் திலகரட்னவுக்கு பாதுகாப்பு வழங்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரக்கெட் துறையில் 1992 ஆம் ஆண்டு முதல் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறுவதாக ஹசான் திலகரட்ன தெரிவித்திருந்தார். இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடத் தயார் எனவும் அவர் கூறினார். ஆனால் தனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரினார்.
இந்நிலையில் ஹசானுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்குமாறு ஹசான் திலகரட்னவை அமைச்சர் அளுத்கமகே அறிவுறுத்தியுள்ளார்.
ஹசான் திலகரட்ன உறுதியளித்தபடி ஆட்டநிர்ணய சதி குறித்து தகவல்களை வழங்கினால் அவருக்கு பாதுகாப்பளிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அதேவேளை கிரிக்கெட் விளையாட்டின் நன்மை கருதி ஆட்டநிர்ணய சதியில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதன் மூலம் இவ்விளையாட்டின் புகழை காப்பது ஹசான் திலகரட்வின் கடமை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr