இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

10 வயதான மாணவி மீது துஷ்பிரயோகம்; பாடசாலை வான் சாரதிக்கு விளக்கமறியல்

JKR  வெள்ளி, 30 மார்ச், 2012


த்து வயதான பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட, பாடசாலை வான் சாரதியொருவரை ஏப்ரல் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
கடந்த திங்கட்கிழமை காலை மேற்படி சாரதி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இச்சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் அச்சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார். கொள்ளுபிட்டியிலுள்ள கைவிடப்பட்ட இடமொன்றுக்கு தனது மகளை அழைத்துச்சென்ற மேற்படி சாரதி இக்குற்றத்தை புரிந்ததுடன் இது குறித்து எவருக்கும் கூறக்கூடாது என அச்சுறுத்தியதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலமளிக்கையில் தான் பாடசாலைக்கு செல்லும்போது வானில் வேறு மாணவமாணவிகள் எவரும் இருக்கவில்லை எனவும் சாரதி வானிற்குள் வைத்து தன்னை துஷ்பிரயோகம்செய்ததுடன் பின்னர் பாடசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். பிலியந்தலையை வசிப்பிடமாகக் கொண்ட சாரதியொருவரே இக்குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr