இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தமிழக அரசை மாட்டிவிட்டு தப்பிய கலைஞர்

JKR  புதன், 12 செப்டம்பர், 2012



திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இலங்கை அகதிகள் எல்லாம் முகாம்களிலிருந்து இந்த அரசு எதுவும் உதவி செய்யவில்லை என்று கூறி வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே? பதில்:- இதற்கு தமிழக அரசு தான் பதில் கூறவேண்டும். கேள்வி:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசே ஒரு மீனவர் மீது துப்பாக்கி 2 சூடு நடத்தி கொன்றிருக்கிறதே? உங்கள் அறிக்கையிலே அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறீர்கள். இருந்தாலும் அதைப்பற்றி உங்கள் கருத்து? பதில்:- கூடங்குளத்தில் துப்பாக்கி பிரயோகம் வரை நடந்து முடிந்திருக்கிறது. காவல் துறையினரின் அத்துமீறலும் நடந்திருக்கிறது. அமைதியான முறையில் உண்ணா நோன்பு இருந்தவர்களிடத்தில் - சாத்வீகமான முறையில் இருந்தவர்களிடத்தில் - அவர்களை அடக்குவதற்காக அடக்குமுறைகளை ஏவி இப்படி காவல் துறை நடந்து கொண்டுள்ளது. அதற்கும் இந்த தமிழக அரசு தான் பொறுப்பாகும். கேள்வி:- கிரிக்கெட் விளையாடுவதற்காக இலங்கைக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்களும் கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில் என்ன சொல்கிறீர்கள்? பதில்:- ரசிகர் என்பதற்காக அல்ல; பொதுவாக விளையாட்டுகள் உலகத்தில் பல நாடுகளில் நடைபெறுவதை ஆதரிப்பவன் நான். இவ்வாறு கருணாநிதி கூறினார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr