இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பாடசாலை மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

JKR  புதன், 5 டிசம்பர், 2012


வுனியா பிரதேசத்தை பாடசாலை மாணவியொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, அரப நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்கின்ற 14 வயதான அன்பழகன் டுலோஜினி எனும் சிவபுரத்தை சேர்ந்த மாணவியே கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். பாடசாலைக்கு அருகில் உள்ள அமைந்துள்ள தனியார் காணியொன்றின் கிணற்றில் இருந்தே குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தாயார் அன்பழகன் சீதாலட்மி கருத்து தெரிவிக்கையில், "பாடசாலைக்கு அமைச்சர் வருவதனால் இன்று சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற இருப்பதாக கூறி பாடசாலை சென்றதாகவும் பின்னர் மாலை 3 மணி வரை மாணவி வீடு வந்து சேரவில்லை. இதனால் அவரை தேடிச்சென்ற போது அவர் கிணற்றில் சடலமாக இருப்பதாக பொது மக்கள் கூறினர். இதற்கிணங்க கிணற்றை சென்று பார்த்தபோது பாடசாலை உடையுடன் காணப்பட்டார்" என்றார். பம்பைமடு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 9 மணியளவில் சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு; பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பைமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr