இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

குடும்பிமலையில் இராணுவ நினைவுத்தூபி திறந்து வைப்பு

JKR  வியாழன், 18 ஏப்ரல், 2013

லங்கை இராணுவத்தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அனுசரணையின் கீழ் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் அழைப்பின் பேரில் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குடும்பிமலையில் (தொப்பிகலையில்) நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவுத்தூபியை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
தொப்பிகலைப் பிரதேசம் 30வருட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்டதன் நினைவாக அங்கு நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டது. அந்த நினைவுத்தூபியையே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார். அது மட்டுமல்லாமல் தொப்பிகலையில் இராணூவ பாரம்பரியத்தைக் கொண்ட பாரம்பரிய பூங்காவொன்றையும் திறந்து வைத்தார். இதன்போது பாதுகாப்புச் செயலாளருக்கு அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் குறித்த நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வில் இலங்கை இராணூவத்தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய,இலங்கை கடற்படைத் தளபதி,விமானப் படைத்தளபதி,பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன்,கிழக்கு மாகாண இரானுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா,கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர,கிழக்கு மாகாண இரானுவ உயர் அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ நீண்ட நாளைக்குப் பிறகு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr