இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை: ஷர்மா

JKR  வெள்ளி, 26 ஏப்ரல், 2013



பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது. லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையிலேயே தமது முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது. பொதுநலவாய மாநாடு நடத்தப்படும் இடத்தை இலங்கையிலிருந்து மாற்றுமாறு வலியுறுத்தி லண்டனிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், பொதுநலவாய அமைப்பின் செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பின் 23ஆவது மாநாடு, இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 15 திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr