இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இராணுவ முகாம்களோ பொலிஸ் நிலையங்களோ பொதுமக்களின் காட்சி கூடங்கள் அல்ல

JKR  சனி, 27 ஏப்ரல், 2013

இராணுவ முகாம்களோ பொலிஸ் நிலையங்களோ பொதுமக்களின் காட்சி கூடங்கள் அல்ல. எவ்விதமான முன் அறிவித்தலோ அனுமதியோ பெற்றுக் கொள்ளாமையினாலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் நுழைவாயிலில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர் என்று இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறுகையில், கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். இவர்கள் பலாலி விமான நிலையம் ஊடாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்தனர். இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படவில்லை. ஏனென்றால் அது பொதுமக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குழுவினர் மாவிட்டபுரம் முகாமிற்கு அருகில் வாகன தொடரணியை நிறுத்தி முகாமிற்குள் செல்ல முற்பட்டுள்ளனர். இதற்கு கடமையிலிருந்த இராணுவ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஏனெனில் இராணுவ முகாமிற்குள் அனுமதியின்றி செல்ல முடியாது என்பதால் இதன் போது அங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் எதிர்க்கட்சி குழுவினர் வாக்குவாதப்பட்டுள்ளனர். உலகத்தில் எந்தவொரு நாட்டிலுமே அனுமதியின்றி இராணுவ முகாமிற்குள் செல்ல முடியாது. ஏனெனில் இராணுவ முகாமோ பொலிஸ் நிலையமோ பொதுமக்களின் காட்சி கூடங்கள் அல்ல என்று கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr