இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சவுதியில் அடைக்களம்கோரும் பணிபெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

JKR  திங்கள், 8 ஏப்ரல், 2013



தா ம் வேலை செய்யும் வீடுகளையிட்டு ஓடிவந்து இலங்கை தூதரகத்தில் அடைக்களம்கோரும் பணிபெண்களின் தொகை கடந்த இரண்டு வாரங்களில் இரட்டித்துவிட்டதாக சிரேஷ்ட தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வீடுகளில் திடீர் சோதனைகள் நடக்கவுள்ளதாக பரவிய செய்தியை தொடர்ந்து வீடுகளைவிட்டு ஓடிவந்து தூதரகத்தில் அடைக்கலம் கோரும் பெண்களில் தொகை கணிசமான அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். சவூதி அரேபியாவுக்கு வந்து 3 மாதங்களுக்குள் பலர் தமது வேலையைவிட்டு ஓடிவிடுவதாக ஓர் ஆய்வு வெளிப்படு;தியுள்ளது. கொடுமைப்படுத்தல், சம்பளம் வழங்காமை போன்றவை இவர்கள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுக்களாக உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வழமையான ஒப்பந்தப்படி மாதம் 650 றியால் சம்பளம் வழங்கப்படும்போது, இவ்வாறு ஓடிவரும் பெண்கள் 1500 றியால் சம்பளத்துடன் வேலை பெறக்கூடியதாக உள்ளது. கொழும்பிலிருந்து ஒரு பணிபெண்ணை பெற்றுகொள்ள 15000 றியாங்வரை செலவளிக்க வேண்டும். ஆனால், ஓடி வருபவர்களை வேலைக்கமர்த்தினால் இந்த செலவு இல்லை. இதனால்தான் ஓடிவரும் பணிப்பெண்களுக்கு கூடிய சமபளம் கொடுக்க சவூதி வேலை கொள்வோர் தயாராக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr