இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தங்காலையில் பொலிஸாருக்கும் ஜே.வி.பி. ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்: 3 பொலிஸார் காயம்; 6 போ் கைது

JKR  ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் தங்காலை நகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நேற்று முற்பகல் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட முயற்சியை அடுத்தே இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.

இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால் பிரதேசத்தின் பொது நடவடிக்கைகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டதனாலேயே அவர்களை அவ்விடத்திலிருந்து கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தகவல் தருகையில் கூறியதாவது:

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முற்பகல் 10.15 மணியளவில் தங்காலை நகரில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததுடன் ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் அரசாங்கத்துக்கு எதிராகவுமான பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே வீதியோரமாக நின்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மேற்படி ஆதரவாளர்கள் பின்னர் பிரதான வீதியை மறித்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அவர்களை வீதியோரமாக விலகி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினோம்.

இருப்பினும் அவர்கள் அதனை கருத்திற் கொள்ளாது பதாகைகளை தாங்கியிருந்த பொல்லுகளைக் கொண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பொலிஸ் தரப்பில் மூவர் காயமடைந்தனர்.

இதனையடுத்து பொலிஸாரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைத்ததுடன் அவர்களில் அறுவரையும் கைது செய்தனர்.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டோர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஜெனரல் சரத் கைது : குருணாகலில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம்

JKR  சனி, 13 பிப்ரவரி, 2010


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஐ.தே.கவின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாமல் கருணாரத்ன ஆகியோர் கலேபண்டார ஆலயத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலவரங்கள் ஏற்படக் கூடும் என்ற அச்சத்தில் தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

சரத் கைது குறித்த ஆர்ப்பாட்டத்தில் அநுராதபுரத்திலும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

JKR  வெள்ளி, 12 பிப்ரவரி, 2010


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட முறுகலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மற்றுமொரு குழுவினர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றைய குழுவினரைத் தாக்க முயற்சித்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமையும் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கவை.

மகரகம ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடியடிப் பிரயோகம்

JKR  வியாழன், 11 பிப்ரவரி, 2010


மக்கள் விடுதலை முன்னணியினர் மகரமவில் இன்று வியாழக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடியடிப் பிரயோகம் செய்து களைத்துள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பிலும் காலி,மாத்தறை ஆகிய பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ங்களின்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

JKR  திங்கள், 8 பிப்ரவரி, 2010


ஊடக அடக்கு முறைக்கு எதிராக இன்று மதியம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஊடக அடக்குமுறைக்கு எதிரான அமைப்பு, உட்பட ஊடக அமைப்புக்கள் பலவும் இணைந்தே இநத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

"லங்கா ஈநியூஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் பிரகீத்தை விடுதலைசெய்" "லங்கா பத்திரிகை ஊடகவியலாளர் சந்தன சிறமல்வத்தையை விடுதலைசெய்" "ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்து" "சுதந்திர ஊடகத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்து" போன்ற கோஷங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பியதைக் காணமுடிந்தது.

அண்மைக்காலத்தில் கொழும்பில் ஊடகவியலளார்கள் நடத்திய பாரிய ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர ஊடவியலளார்களுக்கான தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் தர்மசிறி லங்கா பேலி கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்கு கொண்டுவந்து ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட அரசாங்கம் இடமளிக்க வேண்டும்" எனதெரிவித்தார் .

லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிரணி ஆர்ப்பாட்டம்

JKR  புதன், 3 பிப்ரவரி, 2010


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழவுள்ள அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. டி.பி.ஜயா மாவத்தை, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளின் பிரதான பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிரணி ஆர்ப்பாட்டம்

JKR  


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழவுள்ள அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. டி.பி.ஜயா மாவத்தை, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளின் பிரதான பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிரணி ஆர்ப்பாட்டம்

JKR  


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழவுள்ள அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. டி.பி.ஜயா மாவத்தை, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளின் பிரதான பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

லசந்த கொலை; எவரும் கைதாகவில்லை : கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

JKR  செவ்வாய், 12 ஜனவரி, 2010


ராஜகிரியவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இதனைக் கண்டித்துத் தற்பொழுது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.

நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து, எமது இணையத்தளச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லசந்த கொலை; எவரும் கைதாகவில்லை : கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

JKR  


ராஜகிரியவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இதனைக் கண்டித்துத் தற்பொழுது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.

நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து, எமது இணையத்தளச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லசந்த கொலை; எவரும் கைதாகவில்லை : கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

JKR  


ராஜகிரியவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இதனைக் கண்டித்துத் தற்பொழுது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.

நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து, எமது இணையத்தளச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லசந்த கொலை; எவரும் கைதாகவில்லை : கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

JKR  


ராஜகிரியவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இதனைக் கண்டித்துத் தற்பொழுது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.

நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து, எமது இணையத்தளச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாயில்முன் ஆர்ப்பாட்டம் : மருதானை முஸ்லிம்கள் எதிர்ப்பு

JKR  வெள்ளி, 4 டிசம்பர், 2009


பள்ளிவாயிலை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என மருதானை முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு மருதானை பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இதன்போது அங்கு கூடிய அப்பகுதி முஸ்லிம் மக்கள், ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஜனநாயகத்துக்காக இவர்களால் எவ்வாறு குரல்கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் அங்கு விரைந்த மருதானை பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் இரு தரப்பினரையும் அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறினர்.

இந்நிலையில், அரசியல் லாபம் தேடுவதற்காக எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் பள்ளிவாயிலுக்கு முன்பாக நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பள்ளிவாயில்முன் ஆர்ப்பாட்டம் : மருதானை முஸ்லிம்கள் எதிர்ப்பு

JKR  


பள்ளிவாயிலை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என மருதானை முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு மருதானை பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இதன்போது அங்கு கூடிய அப்பகுதி முஸ்லிம் மக்கள், ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஜனநாயகத்துக்காக இவர்களால் எவ்வாறு குரல்கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் அங்கு விரைந்த மருதானை பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் இரு தரப்பினரையும் அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறினர்.

இந்நிலையில், அரசியல் லாபம் தேடுவதற்காக எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் பள்ளிவாயிலுக்கு முன்பாக நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பள்ளிவாயில்முன் ஆர்ப்பாட்டம் : மருதானை முஸ்லிம்கள் எதிர்ப்பு

JKR  


பள்ளிவாயிலை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என மருதானை முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு மருதானை பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இதன்போது அங்கு கூடிய அப்பகுதி முஸ்லிம் மக்கள், ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஜனநாயகத்துக்காக இவர்களால் எவ்வாறு குரல்கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் அங்கு விரைந்த மருதானை பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் இரு தரப்பினரையும் அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறினர்.

இந்நிலையில், அரசியல் லாபம் தேடுவதற்காக எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் பள்ளிவாயிலுக்கு முன்பாக நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பள்ளிவாயில்முன் ஆர்ப்பாட்டம் : மருதானை முஸ்லிம்கள் எதிர்ப்பு

JKR  


பள்ளிவாயிலை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என மருதானை முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு மருதானை பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இதன்போது அங்கு கூடிய அப்பகுதி முஸ்லிம் மக்கள், ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஜனநாயகத்துக்காக இவர்களால் எவ்வாறு குரல்கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் அங்கு விரைந்த மருதானை பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் இரு தரப்பினரையும் அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறினர்.

இந்நிலையில், அரசியல் லாபம் தேடுவதற்காக எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் பள்ளிவாயிலுக்கு முன்பாக நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி

JKR  செவ்வாய், 24 நவம்பர், 2009


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்று கொழும்பில் தற்பொழுது நடைபெறுகின்றது.

மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படங்களையும் ஆதரவுச் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடனும் கொழும்பு ஆமர்வீதியினூடாக சுமார் 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி

JKR  


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்று கொழும்பில் தற்பொழுது நடைபெறுகின்றது.

மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படங்களையும் ஆதரவுச் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடனும் கொழும்பு ஆமர்வீதியினூடாக சுமார் 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி

JKR  


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்று கொழும்பில் தற்பொழுது நடைபெறுகின்றது.

மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படங்களையும் ஆதரவுச் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடனும் கொழும்பு ஆமர்வீதியினூடாக சுமார் 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி

JKR  


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்று கொழும்பில் தற்பொழுது நடைபெறுகின்றது.

மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படங்களையும் ஆதரவுச் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடனும் கொழும்பு ஆமர்வீதியினூடாக சுமார் 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr