இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நீர்கொழும்பு மாணவருக்கு சென்னையில் நடந்த அறுவை சிகிச்சை

JKR  திங்கள், 31 ஆகஸ்ட், 2009


நீர்கொழும்பைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் ரிசிதரனுக்கு பிறவியிலேயே வலது கண் பகுதியில் கருப்பு நிறத்தில் மருவும் ரோமங்களும் அதிக அளவில் காணப்பட்டன. உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட இவருக்கு அண்மையில் சென்னை குலோபல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை ஒன்று நடத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் இரவீந்திர மோகன் கூறுகையில், "கண்களில் அதிக அளவுக்கு ரோமங்கள் லட்சத்தில் ஒருவருக்குத்தான் வளரும். ஆனால் இதுபோன்று ஆரம்பத்திலேயே இதனை இவ்வாறு சத்திரசிகிச்சை மூலம் அகற்றாவிட்டால், புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டாகும். இதுபோன்ற குறை உள்ளவர்கள் மனரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இந்த அறுவை சிகிச்சையை செய்ய சுமார் 4 மணி நேரம் தேவைப்பட்டது. இன்னும் மூன்று மாதங்களில் மற்றவர்களைப் போல் இயல்பான முக தோற்றத்தை இவர் பெற முடியும்" என்றார். "பல மருத்துவமனைகளை அணுகியும் எவ்வித பயனும் எமக்குக் கிடைக்கவில்லை. கடந்த முறை சென்னை சென்றபோது குலோபல் மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்டு சிகிச்சைக்காக வந்தோம். இங்குள்ள மருத்துவர்களின் உண்மையான ஒத்துழைப்பின் மூலமாக எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளித்த குலோபல் மருத்துவமனைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என்கிறார் ரிசிதரன்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr