கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி மன்னாரிலிருந்து திருகோணமலைக்கான நேரடி போக்குவரத்துச் சேவை ஒன்றை இலங்கை போக்குவரத்துச் சபை ஆரம்பித்து வைத்திருந்தது. எனினும் இச்சேவை இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி மன்னார் அரசாங்க அதிபர் ஏ. நிக்கிலாஸ்பிள்ளை இதனை தினசரி சேவையாகவே ஆரம்பித்து வைத்திருந்தார். இதன்படி தினசரி காலை 6.30 மணிக்கு மன்னாரிலிருந்து வவுனியா சென்று, அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக திருகோணமலையைப் பஸ் சென்றடைந்தது. பின் அதே பாதையூடாக, அன்று மாலை மீண்டும் மன்னாரை பஸ் வந்தடைந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலனடைந்து வந்தனர்.எனினும் இச்சேவை எவ்வித முன்னறிவித்தலுமின்றி கடந்த 21ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக