இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எமது கடற்படை அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உலகம் தயாராகவுள்ளது - பாதுகாப்புச் செயலர்

JKR  ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009


பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் எமது எமது கடற்படையின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உலகம் தயாராகவுள்ளது என பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கடைற்படையினரை பாராட்டும் வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: நாட்டை பாதுகாப்பதில் தம்மை அர்ப்பணித்த கடற்படைத் துருப்புகள் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர். பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறைமையையும் தாய்நாட்டின் ஐக்கியத்தையும் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் 8 கப்பல்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச கடற்பரப்பில் அழித்துள்ளனர். அதன் மூலம் புலிகள் ஆயுதங்களை கொண்டுவருவது தடுக்கப்பட்டதால் புலிகள் கடைசிக் கட்ட யுத்தத்தில் ஆயுத பற்றாக்குறையை எதிர்நோக்கினர். தன்னிடமுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு கடலில் பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங் கைக் கடற்படை உலகின் மிகச் சிறந்த கடற்படைகளில் ஒன்றாக விளங்குகிறது. கடற்படை தனது விசேட படகு அணியைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படகுகள் மற்றும் நடமாட்டங்களை அழித்துள்ளது. அதி உயர் கடல் வலிமையைக் கொண்டுள்ள ஆனால், பயங்கரவாத நடமாட்டங்களை தடுக்க முடியாத நாடுகளும் உள்ளன. இலங்கைக் கடற்படையின் அனுபவங்களை தம்முடன் பகிர்ந்துகொள்ளுமாறு பல நாடுகள் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr