கொலம்பிய ஜனாதிபதி அல்வாரோ யூரிப் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார்.ஜனாதிபதி அல்வாரோவிற்கு அவரது இல்லத்தில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தமது கடமைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதகாவும் கொலம்பிய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..ஆர்ஜன்டீனாவில் நடைபெற்ற தென் அமெரிக்க நாடுகளது தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் வைரஸ் தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..கொலம்பியாவில் மொத்தமாக 621 பேர் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக