இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜெகன்மோகனுக்கு முதல்வர் பதவி வழங்கக் கோரி ஆந்திராவில் கலவரம்

JKR  திங்கள், 28 செப்டம்பர், 2009

ஆந்திராவில் மறைந்த முதல்வர் ராஜசேகரரெட்டியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு காங். அலுவலகங்களை அவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

வன்முறையாளர்கள் 2 அரசு பஸ்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறந்தார். அவரது மறைவு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தந்தையின் முதல்வர் பதவி மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவு கோஷ்டியினர் ஆதரவு கரம் உயர்த்தினர்.

தற்காலிக முதல்வர் ரோசய்யாவுடன் மீண்டும் ஒரு முறை புதிதாக அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்ற போது, ரெட்டி மகன் ஆதரவாளர்கள் சிலர் பதவி ஏற்க வருவார்களா என்ற சந்தேகம் எழுந்ததது.

காங். உயர் கமிட்டி ரோசய்யாவே முதல்வராக இருப்பார் என அறிவித்தது. மேலும் சோனியாவின் உத்தரவை அடுத்து ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் அமைதியாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr