போரில் அப்பாவை இழந்தேன், எனது குடும்பம் எல்லாவற்றையும் இழந்தது வன்னியில் இருந்து உட்த்த உடுப்போடு வந்தோம்.ஆனாலும் முகாமில் இருந்து படித்து பரீட்சையில் வெற்றி பெற்றேன் இவ்வாறு தனது பிஞ்சு மனது எதிர்கொண்ட மிகப்பேரழிவு அனுபவத்தை கூறுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தில் 164 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம்பெற்ற தவபாலன் அறிவன்.
அவர் மேலும் கூறுகையில் ;புலமைப் பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தோம். முகாமில் 50 மீற்றர் தொடக்கம் 100 மீற்றர் இடைவெளிகளில் மின்கம்பங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. தொண்டு நிறுவனம் விளக்கு ஒன்றைத் தந்தபோதும் மண்ணெண்ணெயின் விலை 200 ரூபாவாக இருந்தது. ஆகையால் நாம் தொடர்ந்து மின்கம்பங்களை நாடிச்சென்றே படித்தோம். என்றாலும் என்னுடைய அம்மா கஷ்டத்திலும் முகாமில் 200 ரூபா கொடுத்து ரியூசனுக்கு அனுப்பினார். முகாமிலும் ஆரம்பத்தில் அவர்கள் உணவு தந்தார்கள். அது எங்களுக்கு ஒத்து வரவில்லை. அதனால் வயிற்றோட்டம் ஏற்பட்டது. எங்களுக்கு முகாமில் கற்பித்த ஆசிரியர்கள் கூறுவது ஒன்றைத்தான் "உடுத்த உடுப்புடன் வந்த எங்களுக்கு கல்வி ஒன்றுதான் அழியாச் செல்வம்" என்றார்கள். இதுவே எங்களுக்குக்கல்வி கற்க ஊக்கமாக அமைந்தது.இவ்வாறு குறிப்பிட்டார் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 164 புள்ளிகளைப் பெற்று மாவட்டமட்டத்தில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் தவபாலன் அறிவன்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக