இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரிவோம் சந்திப்போம்.. மீண்டும், சந்திப்போம் பிரிவோம்.. (தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பாம், ஐக்கியத்துக்கு முயற்சியாம்.) -வாசகர் கருத்து-

JKR  ஞாயிறு, 15 நவம்பர், 2009


தேர்தல் ஒன்று நடைபெற்று, அதில் மீண்டும் மகிந்தாவின் ஆட்சி நிலைபெற்று, அவர் விரும்பியோ விரும்பாமலோ 13வது திருத்த சட்டத்திற்க்கு அமைய ஒரு தீர்வுதிட்டம் அமைய இருப்பNது யதார்தம், இதில் நாங்கள் ஒற்றையாக இருந்தாலும், ஒற்றுமைப்பட்டு காட்டினாலும் பெரியளவு மாற்றங்களை கொண்டு வரமுடியாது என்பதும் யதார்த்தம். ஐக்கியம் அவசியம் இல்லை என்ற பொருளில்லை, அதற்க்கான அவசரத்தில் நீங்கள் உங்களை களங்கபடுத்த வேண்டிய தேவை இல்லை என்பதே எங்கள் ஆதங்கம்.

நடந்து முடிந்த மாநகர சபை தேர்தல்களில் நேர்மையான உங்களை மக்கள் பெரியளவில் ஆதரிக்கவில்லை எனவே கொலைகாரர்களுடன் கூட்டு சேர்ந்தால் மக்கள் உங்களையும் சேர்ந்து ஆதரிப்பார்கள் என்று நீங்கள் மக்களை எடை போடுவது அது அவர்களை கேவலப்படுத்துவதற்க்கு சமம்.

நடந்து முடிந்த அந்த அவசர தேர்தலில் மௌனித்து இருந்த மக்கள் எண்பது வீதத்திற்க்கு அதிகமானவர்கள், அவர்கள் எண்ணங்களில் எது சரி எது பிழை என்று தீர்மானம் எடுக்கக்கூடிய கால அவகாசம் இல்லை என்பதே நிஜம். சொல்லப்போனால் இந்த எண்பது வீதமான மக்களே தமிழ் மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தி. அவர்களிடம் உங்களுக்கும் இடம் உண்டு. பாசிசத்தின் இரும்பு பிடிக்குள் இருந்து விடுபட்டு இன்று ஓரளவிற்க்காது நிம்மதி காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் அவர்கள் முன்னால் அதே பாசிசத்தின் எச்சங்களை துணைக்களைத்துக்கொண்டு சென்று அவமானப்பட வேண்டாம், புலிகளின் கொலை அச்சுறத்தலுக்குள் மத்தியில் வாழ்ந்து காட்டியவர்கள் நீங்கள், உங்கள் தியாங்கங்களுக்குள் உள்ள நியாயங்களை தாரை வார்த்து கொடுக்க வேண்டாம்.

அன்று முதல் இன்று வரை மக்களின் நலம் சார்ந்தே உங்கள் செயல்பாடுகள் எல்லாம் அமைந்திருந்தன. ஆனால் முதல் முதலாய் உங்களின் நலம் சார்ந்து ஒரு முடிவு எடுப்பதாக என்னைப் போன்றவர்கள் சந்தேகப்படுவதில் தவறு இருந்தால் அதை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும் உங்களுடையது. ஏனெனில் எது நியாயம்? எது அநியாயம்? என்று ஆராய்ந்து முடிவெடுப்பதை விட மனதில் என்ன தோன்றுகிறதோ அது நியாயமாகத்தானிருக்கும் என்று வாழ்ந்த எமது தோழரின் வழியை ஏற்றுக்கொண்ட என்னை போன்றவர்களின் மனதில் இது வெறும் வலியாக மட்டும் தான் தோன்றுகிறது. மக்கள் இல்லாத மண்ணை நேசிக்காத தோழரின் பாசறையில் வளர்ந்து பின்னர் அந்த மாமனிதனை அழித்தொழித்த பாசிசத்தின் காலை கழுவி வயிறு வளர்த்த அந்த கூட்டத்துடன் மக்கள் நலம் கருதி கூட்டுச்சேர்வது என்பது பல ஆயிரம் காரணங்கள் கொண்டும் நியாயப்படுத்த முடியாது..!!
-மோகன்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr