கருவேப்பிலைக்குழம்பு செய்யத்தேவையானவை.
புளி ------ ஒரு எலுமிச்சம்பழம் அளவு.
வற்றல் மிளகாய். ---- 5 (அய்ந்து)
உளுத்தம்பருப்பு. 1 1/2 ஸ்பூன்(ஒன்றரை)
கடுகு. ------- அரை ஸ்பூன்
உப்பு. ---------- 1 1/2 ஸ்பூன்(ஒன்றரை)
பெருங்காயம். ---- ஒரு துண்டு
கருவேப்பிலை (உதிர்த்தது) -- 2 கரண்டி
செய்யும் முறை:
முதலில் இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை
சேர்த்து உளுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய்,
பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொண்டு
அவற்றுடன் புளி, உப்பு, கருவேப்பிலை (பச்சை
யாக) அம்மியில் வைத்து நன்றாகஅரைத்து
விழுதாக எடுத்து ,குழம்பாக ஜலம் விட்டுக்
கரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு
அடுப்பில்வைத்து பச்சை வாசனை போக கொதிக்
கவிடவும். கொதித்தபின்பு கடுகு பொரித்துக்
கொட்டி இறக்கிவைக்கவும். இப்போது கருவேப்
பிலைக் குழம்பு ரெடி.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக