கடந்தகால யுத்தம் காரணமாக வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலிருந்து உடுத்துறை வரையான பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் குடத்தனை நலன்புரி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் விஜயம் மேற்கொண்டார்.
இன்று முற்பகல் நலன்புரிநிலையத்திற்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தங்கியுக்க மக்களுடன் உரையாடி அவர்களது தேவைகளைக் கண்டறிந்தார். தாம் மீளவும் தமது சொந்த இடங்களுக்கே சென்று வாழவிரும்புவதாக அம்மக்கள் தெரிவித்தபோது அதற்குரிய காலம் கனிந்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். மேலும் நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் படித்த யுவதிகள் இருவரை தெரிவுசெய்ததுடன் அவர்களுக்கு முதலுதவி மற்றும் ஆரம்ப வைத்திய பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நலன்புரி நிலையத்தில் அடிப்படை வைத்திய தேவைகளை தற்காலிகமாக பூர்த்திசெய்யவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக